“மூலிகை மருத்துவம்” என்பது மிகவும் பழமையான மருத்துவமே தவிர அதுவொன்றும் புதுமையானதல்ல. நமது முன்னோர்கள் பாரம்பரியமாக தொன்றுதொட்டு செய்து வந்த மருத்துவமே “மூலிகை மருத்துவமாகும்”. இதனை காலத்திற்க்கேற்ப ‘நாட்டு வைத்தியம்’ எனவும், ‘இயற்கை வைத்தியம்’ எனவும், ‘பாட்டி வைத்தியமென்றும்’ நமது முன்னோர்கள் பலவிதமாக அழைத்து வந்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்திலும் இம் மூலிகை மருத்துவமுறை நாடு முழுவதிலும் புழக்கத்தில் இருந்து வருகின்றது. தாவரத்தின் இலை, பூ, காய், தண்டு, வேர், என அணைத்து பகுதிகளும் மனித குலத்திற்கு மருந்தாக பயன்படுகிறது. மூலிகைத்தாவரத்தின் பகுதிகளை பாங்காக வெட்டி, அதனை வெயில் படாமல் நிழலில் காய வைத்து, அரைத்து, தனிப்பொடியாகவும், சூரணமாகவும், லேகியம், பஸ்பம், செந்தூரம், மாத்திரை, எண்ணெய் எனப் பலவாறாக மருத்துவத்தில் பயன்படுத்தி பலவித நோய்களிலிருந்து விடுபடவும், நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய ஒன்றியத்தின் அணைத்து  பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் “மூலிகை” ஒன்றே அடிப்படையானது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ்ச்சமூகத்தில் மூலிகைகளை பற்றிய அறிவை பெற்றிருந்தவர்களின் முன்னோடியாக விளங்கியவர்கள் சித்தர்களே ஆவர். ஆதலால், காலப்போக்கில் மூலிகை மருத்துவம் “சித்த மருத்துவமானது”. பெரும்பாலான சித்தர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும், சித்தமருத்துவத்தின் தோற்றுவாயாக இருந்ததும், “தமிழகமே” என பலரும் வாதிடுவதுண்டு. அதற்கு சாட்சியமாக, ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட பழமையான சித்த நூல்களும், ஓலைச் சுவடிகளும் தமிழிலே கிடைக்கப்பட்டு மேற்கூறிய கூற்றை மெய்பிக்க துணையாக இருக்கின்றது. சித்தர்கள் அப்பொழுதே நன்கு கற்றறிந்தவர்களாகவும், மருத்துவ ஞானம் பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதற்கு அவர்களின் பாடல்களே சான்று. ஒவ்வொரு பாடல்களிலும் நோயை பற்றியும், நோயின் தன்மையை பற்றியும், குணப்படுத்தும் மூலிகைகளையும், அதை உட்கொள்ளும் முறைகளையும் அழகாக விவரித்துள்ளனர். அவற்றை அடிப்படையாக வைத்து பார்த்தோமெனில், சித்த மருத்துவம் பல மருத்துவ முறைகளை உள்ளடக்கியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும், குறிப்பாக ஆயுர்வேதம், யுனானி, ஜோதிடம், யோகம், தியானம், இயற்கை மருத்துவம் மற்றும் பல.

சித்த மருத்துவத்தின் அடிப்படையில், ஒவ்வொரு உடல்-உறுப்புகளையும் பஞ்சபூதங்களுடன் தொடர்புபடுத்தி நோய்க்கான மூலிகையை / கூட்டு மூலிகைகளை வழங்கியுள்ளனர். உதாரணமாக, நெருப்பை – கண், மற்றும் வயிறுடனும், காற்றை – நுரையீரல், இருதயத்துடனும், நீரை – இரத்தம், நாளமில்லா சுரப்பிகளுடனும், நிலத்தை – சதை, தோல்களுடனும், ஆகாயத்தை – தலையுடனும் ஒருமுகப்படுத்துகின்றனர். உடலிலுள்ள இந்த உறுப்புகளின் செயல்பாடுகளை “நாடி” பிடித்து பார்ப்பதன் மூலம் நோயின் தன்மையை கண்டு கொள்கின்றனர். சித்த மருத்துவத்தில் “நாடி பார்ப்பது” பிரதான பங்கு வகிக்கிறது. நாடியை மூன்று வகையாக பிரிக்கின்றனர். அவைகள் வாதம், பித்தம், மற்றும் கபம் ஆகும்.   

இங்கே சில நோய்களையும் அதற்கு பயன்படும் கூட்டு மூலிகைகளையும் பாப்போம்;

  1. சர்க்கரை குறைபாடு:

முருங்கைகீரை, வேப்பம்பூ, வில்வை பழம், ஆவாரம்பூ, சிறுகுறிஞ்சான், நாவல்விதை, சீந்தில், வெந்தயம், நெல்லிக்காய், வேப்பிலை, சிறியாநங்கை, இலவங்கப்பட்டை, வல்லாரை, திரிபலா, கறிவேப்பிலை, ஆவார இலை, தொட்டாசிணுங்கி, வேப்பம்பட்டை, மாதுளை ஓடு, பறங்கிப்பட்டை, நித்தியகல்யாணி, கீழாநெல்லி, காட்டுசீரகம், பாகற்காய், மாம்பருப்பு, தேற்றான்கொட்டை, சுண்டை வற்றல். 

  1. வயிற்றுப்புண் (அல்சர்):

திரிபலா, மணத்தக்காளி, கடுக்காய், அதிமதுரம், வில்வை, கற்றாழை, ரோஜாப்பூ, வாழைப்பூ, வெந்தயம், சாதிக்காய், மாதுளை ஓடு, அத்தி இலை, மாசிக்காய், வில்வைப் பழம், தேற்றான் கொட்டை.       

  1. உடல் எடை குறைய:

அருகம்புல், திரிபலா, இலந்தை இலை, வேப்பம்பட்டை, கோரைக்கிழங்கு, ஆவாரம்பூ, இலவங்கப்பட்டை, நத்தைச்சூரி, ரோஜாப்பூ, வெந்தயம், தான்றிக்காய், மாசிக்காய், வாழைத்தண்டு, சிறுதேக்கு, மருதம்பட்டை, ஓரிதழ்தாமரை, செம்பருத்திப்பூ, தூதுவளை, நாயுருவி.    

  1. மலச்சிக்கல்:

நிலாவரை, கடுக்காய், திரிபலா, அவுரிஇலை, ரோஜாப்பூ, வில்வைப்பழம், வல்லாரை, முடக்கத்தான், அத்தி இலை, மணத்தக்காளி, சக்தி சாரணை, அரச இலை, அகத்திக்கீரை, கடுக்காய் பிஞ்சு, கற்றாழை, சிறுசெருப்படை, நாயுருவி.   

  1. மாதவிடாய் சிக்கல்:

ஆடுதின்னாப்பாளை, சிறுகுறிஞ்சான், சதக்குப்பை, சிறுதும்பை, தண்ணீர்விட்டான் கிழங்கு, நன்னாரி வேர், திப்பிலி, வேலிப்பருத்தி, செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, அசோகப்பட்டை, கற்றாழை, வெந்தயம், நிலப்பனைக்கிழங்கு, வசம்பு, பிரண்டை, மரமஞ்சள்.       

  1. வெள்ளைப்படுதல்:

தண்ணீர்விட்டான் கிழங்கு, நன்னாரி, ஆவாரம்பூ, அசோகப்பட்டை, வெந்தயம், நிலப்பனைக்கிழங்கு, வல்லாரை, வாழைப்பூ, ரோஜாப்பூ, வெள்ளரி விதை, தேற்றான்கொட்டை.

  1. சளி, இருமல்:

தூதுவளை, துளசி, அதிமதுரம், சிறுதும்பை, ஆடாதோடை, கண்டங்கத்திரி, முசுமுசுக்கை, தாளிசாதி, திரிகடுகு, சித்தரத்தை, கற்பூரவள்ளி, சதக்குப்பை, தாளிசாபத்திரி, தாமரைப்பூ, முருங்கைக்கீரை, வேலிப்பருத்தி, மூக்கிரட்டை, தேற்றான் கொட்டை, சுண்டை வற்றல். 

  1. ஆஸ்த்மா, சைனஸ், காசம்:

திப்பிலி, ஆடாதோடை, வில்வை, அதிமதுரம், சித்தரத்தை, வெந்தயக்கீரை, துளசி, விஷ்ணுகிரந்தி, வசம்பு, அரசபழம், தொட்டாசிணுங்கி, தூதுவளை, நொச்சி, சுண்டை வற்றல்.  

  1. தோல் தொடர்புடைய நோய்கள் (படை, ஊறல், சிரங்கு, சொறி):

சிறியாநங்கை, பெரியாநங்கை, பூனைக்காலி விதை, மூக்கிரட்டை, ஆடுதின்னாப்பாளை, ஆவாரம்பூ, வேலிப்பருத்தி, சிவனார்வேம்பு, சிறுசெருப்படை, நன்னாரி, வாழைப்பூ, பறங்கிப்பட்டை, வாழைத்தண்டு, குப்பைமேனி, மாசிக்காய், கோரைக்கிழங்கு, சிறுதும்பை, வேப்பம்பட்டை, அருகம்புல், நிலாவரை, மணத்தக்காளி, அம்மான்பச்சரிசி.   

  1. குழந்தை பேறு (பெண்களுக்கு):

சிவனார் வேம்பு, அத்திபழம், ஆவாரம்பூ, வாழைப்பூ, இலந்தை இலை  

  1. அஜீரணம், வாய்வு தொல்லை:

வெந்தயம், வில்வைப் பழம், கஸ்தூரிமஞ்சள், வசம்பு, ஓமம், திரிகடுகு, வாய்வு விளங்கம், அகத்திக்கீரை, மருதம்பட்டை, கற்றாழை, சீரகம், தாளிசாதி, வெந்தயக்கீரை, வேப்பிலை, கருவேப்பிலை, கொத்தமல்லி, சுண்டை வற்றல்.

  1. நரம்பு தளர்ச்சி:

வல்லாரை, ஓரிதழ் தாமரை, ஜாதிக்காய், திரிபலா, அஸ்வகந்தா, கருஞ்சீரகம், அமுக்கரா

  1. உஷ்ணம்:

மாம்பருப்பு, பூமிசர்கரைக் கிழங்கு, முருங்கை கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயம், ரோஜாப்பூ, நன்னாரி, கீழாநெல்லி, கற்றாழை, ஆவாரம்பூ, நத்தைச்சூரி, தாமரைப்பூ, சீரகம், காட்டுச்சீரகம், செம்பருத்திப்பூ, வேப்பம்பட்டை, மாசிக்காய், கொத்தமல்லி, தேற்றான்கொட்டை.    

  1. மூட்டுவலி, இடுப்புவலி:

முடக்கத்தான், கருஞ்சீரகம், மிளகு, அஸ்வகந்தா, பறங்கிப்பட்டை, வேலிப்பருத்தி, கண்டங்கத்திரி, தூதுவளை, கோரைக்கிழங்கு, சிறுதும்பை, வில்வை, முருங்கை விதை, முருங்கை கீரை, நிலவேம்பு, அமுக்கரா, ஆவாரம்பூ, திரிபலா, ஜாதிக்காய், நன்னாரி, சித்தரத்தை, ஓரிதழ் தாமரை, நொச்சி.  

  1. சிறுநீர் எரிச்சல்:

வெட்டிவேர், நாயுருவி, வல்லாரை, மணத்தக்காளி கீரை, மூக்கிரட்டை, சீரகம், சிறுபீளை, ஆவாரம்பூ, நன்னாரி வேர், தண்ணீர் விட்டான் கிழங்கு, நத்தைச்சூரி, திப்பிலி, அரசம்பட்டை, நெருஞ்சில், நீர்முள்ளி இலை, ஆவார இலை, வாழைத்தண்டு, செண்பகமொக்கு, தேற்றான் கொட்டை, வெள்ளரி விதை.   

  1. விஷக்காய்ச்சல்:

பொன்னாங்கண்ணி, ரோஜாப்பூ, முருங்கைக்கீரை, அவுரி, விஷ்ணுகிரந்தி, வேலிப்பருத்தி, வெட்டிவேர், அரச இலை, ஆவார இலை, சுக்கு, தான்றிக்காய், தாளிசாபத்திரி, அமுக்கரா, கோரைக்கிழங்கு, மிளகு, கண்டங்கத்திரி, திப்பிலி, துளசி, நன்னாரி, நொச்சி, வெள்ளறுகு, பூமிசர்கரைக் கிழங்கு, நிலவேம்பு, பொடுதலை, திரிகடுகு, சிவனார்வேம்பு, சிறுதும்பை, திரிபலா, சீரகம், மருதம்பட்டை, வேப்பிலை, வேப்பம்பட்டை, கொத்தமல்லி, மரமஞ்சள், செண்பகமொக்கு, பற்படாகம்.   

  1. மூலம் (உள்மூலம், வெளிமூலம், இரத்தமூலம்):

நாயுருவி, தாமரைப்பூ, தான்றிக்காய், அரசம் பழம், வாழைப்பூ, துத்தி இலை, நிலாவரை, மணத்தக்காளி, கற்றாழை, வெந்தயம், பிரண்டை, அத்திப்பழம், கடுக்காய், பொன்னாங்கண்ணி, இலவங்கப்பட்டை, வல்லாரை, பாகற்காய், அசோகப்பட்டை, பூமி சர்க்கரைக்கிழங்கு, ஆல இலை, தொட்டாசினுங்கி, அத்திப்பட்டை, மாம்பருப்பு, வில்வைப் பழம், கசகசா, மரமஞ்சள்.       

  1. இரத்த அழுத்தம்:

தாமரைப்பூ, நித்தியக்கல்யாணி, கீழாநெல்லி, திரிபலா, செம்பருத்திப்பூ, மருதம்பட்டை, ஆவாரம்பூ, துளசி, சுக்கு, கண்டங்கத்திரி, அத்தி இலை, கோரைக்கிழங்கு. 

  1. தூக்கமின்மை:

தண்ணீர் விட்டான், முடக்கத்தான், ஜாதிக்காய், சீரகம், வல்லாரை, திரிபலா, கசகசா, சுண்டை வற்றல்.  

  1. வாத நோய்:

வாதநாராயணன், அருகம்புல், குப்பைமேனி, அஸ்வகந்தா, ஆடுதின்னாபாளை, காட்டுசீரகம், சாதிக்காய், சதக்குப்பை, சிறுபீளை, தாளிசாதி, நொச்சி, பறங்கிபட்டை, வல்லாரை, வெள்ளருகு, வேலிப்பருத்தி.

(குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில நோய்களை நிவர்த்தி செய்யக்கூடிய மூலிகைகளை பட்டியலிடபட்டுள்ளது. சித்தமருத்துவரின் ஆலோசனை பெற்றபின்னரே அவரது ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும்.)

நோய் ஏற்பட்டு மருந்து மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் உட்கொண்டு பல்வேறு சிரமத்துக்கு ஆளாவதை விட, நமது அன்றாட உணவு பழக்கத்தை சீர்படுத்தி மூலிகை டீ அருந்துதல், மூலிகை பல்பொடி உபயோகித்தல், மூலிகை சூப் குடித்தல், மூலிகை காபி, மூலிகை ரசம், மூலிகை இட்லிப் பொடி போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்.

இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப, தினம் ஒரு மூலிகையை உட்கொண்டு நமக்கு ஏற்படவிருக்கும் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம். குறிப்பாக, வில்வை- வயிற்றுக்கு, வேப்பிலை-தோல் மற்றும் தசை, துளசி-நுரையீரல், நெல்லி-உயிரணுக்கள், அருகம்புல்-இரத்தம், தாமரை-இதயம்.

பயன்பெறுவோம்! பலம்பெறுவோம்!

மு. விநாயகம்,
உலக நல்வாழ்வு நிலையம், கோயம்புத்தூர், தமிழ்நாடு.
அலைபேசி: 98431 93957

—————-

 ம. அப்துல் கரிம்,
ஆய்வாளர்,
உளவியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம், தமிழ்நாடு.
அலைபேசி: 97873 37879

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *